வியாழன் தோறும் இந்த மந்திரங்களை துன்பம் தீர உச்சரித்து வாருங்கள்

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4 #துன்பம்
Mugunthan Mugunthan
10 months ago
வியாழன் தோறும் இந்த மந்திரங்களை துன்பம் தீர உச்சரித்து வாருங்கள்

வியாழக்கிழமையில் குரு பகவானையும், மகாவிஷ்ணுவையும் வழிபடும் போது சில சக்தி வாய்ந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம். 

இந்த மந்திரங்கள் சகல விதமான பிரச்சனைகளையும் நீக்கி, நிம்மதியான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அள்ளித் தரும் அதீத ஆற்றல் கொண்டதாகும். குரு பகவான், ஞானத்தை வழங்கக் கூடியவராகவும், மங்கள நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணமானவராகவும் பார்க்கப்படுகிறது. 

அதே சமயம் மகாவிஷ்ணு, பாவங்களை போக்குபவராகவும், செல்வத்தை அருள்வதுடன் பக்தர்களின் துன்பங்களை போக்குபவராகவும் உள்ளார். இதனால் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பவர்களும், கஷ்டங்கள் தீர வேண்டும் என்பவர்களும் வியாழக்கிழமையில் மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

 இந்த நாளில் விஷ்ணு மந்திரத்தையோ அல்லது குரு பகவான் மந்திரத்தையோ தொடர்ந்து உச்சரித்து வருவது மிக விசேஷமானது திருமண வாழ்க்கை சந்தோஷமானதாக அமைய வேண்டும் என விரும்பும் தம்பதிகள், கணவன் - மனைவியாக சேர்ந்து வியாழக்கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

 வியாழக்கிழமையில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்வில் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. மங்களகரமான சக்தி வாய்ந்த வியாழக்கிழமையில் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகவும், துன்பங்கள் அனைத்தும் நீங்கவும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறவும் சில சக்தி வாய்ந்த குறிப்பிட்ட மந்திரங்களை சொல்லி வந்தாலே போதும்.

 வியாழக்கிழமையில் மகாவிஷ்ணுவிற்குரிய விஷ்ணு காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது மிக உயர்வான பலன்களை தரும். இது மன அமைதியை தருவதுடன் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விலகி ஓட செய்து விடும்.

 விஷ்ணு காயத்ரி மந்திரம் :

 ஓம் நாராயணாய வித்மஹே

 வாசுதேவாய தீமஹி

 தந்நோ விஷ்ணு பிரசோதயாத்

 பிரகஷ்பதி பீஜ மந்திரம் ;

 ஓம் பிரகஸ்பதயே நமஹ

 ஓம் கன் குருவே நமஹ

 ஓம் ஸ்ரீ பிரகஷ்பதயே நமஹ

 இது அனைதஅது விதமான செல்வத்தையும், இன்பங்களையும் தரும் மந்திரமாகும். இதை சொல்வதால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

 கிருஷ்ண அவதார மந்திரம் :

 ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே

 ஹே நாத் நாராயண் வாசுதேவாய

 குரு பகவான் காயத்ரி மந்திரம் :

 வருஷபத் வஜாய வித்மஹே

 க்ருணீ ஹஸ்தாய தீமஹீ

 தந்நோ குரு ப்ரசோதயாத்

 சக்தி வாய்ந்த பெருமாள் மந்திரம் :

 திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

 அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

 பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

 என்னாழி வண்ணன்பால் இன்று!

 தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

 சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்

 திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

 இரண்டுருவு மொன்றாய் இசைந்து!

 ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

 ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

 ஸ்ரீவேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

 ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

 குரு ஸ்லோகம் :

 குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

 அவருக்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள், குழந்தையின்மை, காது, கல்லீரல், இடுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் குருவின் மந்திரம் சிறந்த மருந்தாக அமையும்.

எனவே நீங்கள் பிரதி வியாழன் தோறும் மேற்கூறிய தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தொடர்ந்து வரும் துன்பங்கள் யாவும் பறந்தோடிவிடும்.