சகல துன்பங்களும் பறந்தோட இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4 #துன்பம்
Mugunthan Mugunthan
10 months ago
சகல துன்பங்களும் பறந்தோட இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்

நமது துன்பங்கள் கஷ்டங்கள் யாவும் தீர நாம் மேற்கொள்ளுங் காரியங்களான சாஸ்திர நடைமுறைகள்,விரதம், மற்றும் பூஜையை விட எளிய ஒரு எளிய மந்திரத்தை தொடர்ந்து நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தாலே அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 

ஆம், உண்மை தான். மிகவும் எளிமையான, அதே சமயம் சக்தி வாய்ந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து விடுபடலாம் என வேதங்களும், புாரணங்களும் சொல்கின்றன. 

அப்படிப்பட்ட மந்திரம் எது என சிந்திக்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை. அனைவரும் நன்கு அறிந்த சிவ சிவ என்ற இரண்டெழுத்து மந்திரம் தான் அது.

 இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் பல விதமான பலன்களை பெறலாம். அதுவும் சிவ பெருமானுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரம் போன்ற நாட்களில் சொல்வது மிகவும் சிறப்பானதாகும்.

 முடிந்தவர்கள், ' ஓம் தத்புருஷாய வித்மஹே; மஹாதேவாய தீமஹி; தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்' என்ற மிகவும் சக்தி வாய்ந்த சிவ காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் மன அமைதியும், சிவ அருளும் கிடைக்கும். சிவ சிவ என உச்சரித்து வந்தாலே சகல விதமான பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

விரதம்,  பூஜை மற்றும் கைங்காரியங்கள் செய்ய முடியாதவர்கள் தம் தேவைகள் நிறைவேற இந்த சிவ சிவ மந்திரத்தை உச்சரித்து சிவனருளைப் பெறுங்கள்.