கோத்தாவுக்கு நடந்தது ரணிலுக்கும் நடக்க விடமாட்டோம்: மஹிந்தானந்த அளுத்கமகே
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நடந்ததை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடக்க பொதுஜன பெரமுன விடாது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தற்போது இது அரசியல் பிரச்சனையல்ல, மக்களின் வாழ்வாதார பிரச்சனை, எனவே தேர்தலின் போது மட்டும் அரசியல் செய்வோம் எனவும் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
“யார் வேணும்னாலும் கதைக்கலாம்.. ஆனால், மகிந்த ராஜபக்ச ஆட்சியில்தான் நாடும் கிராமமும் பயன்பட்டது.
அந்தக் காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை இலகுவாக கிடைத்தது. சஜித் பிரேமதாசவைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ,
ஐக்கிய மக்கள் சக்தி, இது வெறும் நேரத்தை வீணடிப்பதாகும்.அவரது 60, 70 பேர் கொண்ட குழு ரணில் விக்கிரமசிங்கவுடன் அமர்ந்திருக்கும்.
பேஸ்புக் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கதி என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.
அதன் காரணமாகவே கடந்த காலங்களில் ஜே.வி.பி.யின் கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இன்று எமது சந்திப்புக்கு வந்துள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.