விமல் விரவன்சவை கைது செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!
#SriLanka
#Wimal Weerawansa
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் விஜயம் செய்த போது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.