உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்

#Russia #Ukraine #War #President #SouthAfrica
Prasu
3 years ago
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, எகிப்து, செனகல், காங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆப்பிரிக்க குழு, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் ஆப்பிரிக்க குழுவினர் ரஷியாவுக்கு சென்றனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற தென் ஆப்பிரிக்க அதிபர் சிரிஸ் ரமபோசா, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது புதினிடம் சிரில் ராமபோசா கூறும்போது,, 'போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

அது தொடர்பாக அவர் கூறும்போது, 'போரை என்றென்றும் தொடர முடியாது. அனைத்து போர்களும் தீர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மிகத் தெளிவாக செய்தியை தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். 

இந்த போரால் ஆப்பிரிக்க கண்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

 இதற்கு பதிலளித்து புதின் கூறும்போது, 'உக்ரைன் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. குழந்தைகள் புனிதமானவர்கள். அவர்களை மோதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றினோம். அவர்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றினோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4