உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Police
Prathees
2 years ago
கிண்ணியாகலை ஹிந்தகளுகம பிரதேசத்தில் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, கிண்ணியாகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது இடம்பெற்றுள்ளது.
ஹிந்தகளுகம, பஹல லந்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று அம்பாறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.