சிறுமி அளித்த பொய்யான புகார்; பெங்களூரில் டெலிவரி பாயை புரட்டியெடுத்த மக்கள்!

#Tamilnews #Breakingnews #ImportantNews #Bangalore
Mani
2 years ago
சிறுமி அளித்த பொய்யான புகார்; பெங்களூரில் டெலிவரி பாயை புரட்டியெடுத்த மக்கள்!

பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார்.

தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்குக் கொண்டுசென்றதாகவும் தான் அவர்கையைக் கடித்து தப்பி வந்ததாகவும் சிறுமி கூறியதால் ஆத்திரம்அடைந்த பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உணவு டெலிவரி ஏஜன்ட்டை சரமாரியாகத் தாக்கினர்.

ஆனால் விசாரணையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போது சிறுமி தானாகவே மாடிக்கு சென்று விளையாடியதும் பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து டெலிவரி ஏஜன்ட் மீது பழியைப் போட்டதும் புலனாகியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4