சஜித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: அனுர திஸாநாயக்க
#SriLanka
Mayoorikka
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் இயக்கம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் ஏற்கனவே புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.
தங்காலை பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரம் சாதாரண மக்களிடம் கைமாறியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கை சரியல்ல எனவும், வியாபாரம் முடங்கிக் கிடக்கும் பின்னணியில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றார்கள் மருந்தும் இல்லை.