விபச்சார விடுதியை சுற்றி வளைத்த சிஐடியினர்: எட்டு பேர் கைது
#SriLanka
#Arrest
#Police
#Women
Prathees
2 years ago
கல்கிஸ்ஸ, காலி வீதியில் ஸ்பா மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்தி வந்த ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது நேற்று பிற்பகல் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, இடல்கஸ்ஹின்ன, பன்னிபிட்டிய, வாதுவ, வத்தளை மற்றும் ஹல்மில்லாவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கல்கிஸ்ஸ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்