கிழக்கில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த 520 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு
PriyaRam
2 years ago
கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று(16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில், இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, விமல வீர திஸாநாயக்க மற்றும் பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G திஸாநாயக்கா, கிழக்கு மாகாணத்தின் துறைசார் அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன .



