விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த கோாிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன சுட்டிக்காட்டினாா்.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுத்தாா்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் - விமல் வீரவன்ச, சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து மற்றும் பணம் ஈட்டியமை தொடர்பிலான தகவலை வௌியிடத் தவறியமையால் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.