வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த தம்பதியினர் கைது

#SriLanka #Arrest #Police #sri lanka tamil news #money
Prathees
2 years ago
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த தம்பதியினர் கைது

 வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரிடம் எட்டு லட்சத்து 20,000 ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற 06 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 ரம்புக்கன, பெலிகொடபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 விசாரணையில், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறு நபர்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேக நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!