அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும்; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
சரியான முறையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்கால வரலாற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் 2017ஆம் ஆண்டு பதிவாகியுள்ளனர். அந்த ஆண்டில், இலங்கையில் 186,101 டெங்கு நோயாளர்கள் பதிவாகினர். அத்துடன், அந்த வருடத்தில் 440 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் இவ்வருடம் வரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
''தற்போது நாடளாவிய ரீதியில் டெங்கு பரவி வருகின்றது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 35 பேர் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மூன்று தொடக்கம் நான்கு பேர் உள்நோயாளர்களாக வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருகின்றனர். மேலும், நாளொன்றுக்கு சுமார் 7 பேர் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், இந்த நோய் விரைவில் குறையும் என நம்புவது கடினமாக உள்ளது. மழையுடனான வானிலை மேலும் நீடிப்பதால் சுற்றுச் சூழலையும், வீட்டிலும் சுத்தமான சூழலை ஏற்படுத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.