வீடொன்றினுள் இருந்து இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!
#Rescue
PriyaRam
2 years ago
கம்பஹா - வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இருந்து இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் 68 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.