பேரூந்து கட்டணத்தை உயர்த்துமாறு பொது பேரூந்து சங்கம் கோரிக்கை
#SriLanka
#prices
#Bus
#Lanka4
Kanimoli
2 years ago
பேரூந்து கட்டணத்தை உயர்த்துமாறு பொது பேரூந்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது.
உதிரி பாகங்கள், லூப்ரிகண்டுகள், குத்தகை பிரீமியங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பேரூந்து கட்டணத்தை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது எனவும், தற்போதுள்ள பேரூந்து கட்டணமே தொடரும் எனவும் இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.