தேசிய பாதுகாப்புக்கு வெளிநாட்டு உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல்
#world_news
#Japan
Mani
2 years ago
கடந்த டிசம்பரில், ஜப்பான் ஒரு தேசிய பாதுகாப்பு உத்தியை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்தை 310 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.25 லட்சம் கோடி) உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கடன் அதிகரிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஜப்பான் தனது வெளிநாட்டு உதவியை பொருளாதாரம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரேடார்கள், ரோந்துப் படகுகள், துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கவனம் செலுத்தப்போவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.