நஞ்சுத்தன்மையான கடல்மீனை உண்டதால் பெண் ஒருவர் உயிரிழப்பு! மூவர் ஆபத்தான நிலையில்

#SriLanka #Batticaloa #Death
Mayoorikka
2 years ago
நஞ்சுத்தன்மையான கடல்மீனை உண்டதால் பெண் ஒருவர் உயிரிழப்பு! மூவர் ஆபத்தான நிலையில்

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

 குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

 கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!