பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு நேற்று நன்கொடையாக சீன அரசாங்கத்தினால் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது
#SriLanka
#Douglas Devananda
#Fisherman
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
தமிழ் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்த வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் நேற்று ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று (02) வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடல்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இந்திய மீனவர்களுடனான பிரச்சினையில் இந்திய துாதுவரை சந்திக்க விருந்த அவர்களது நிலைப்பாட்டை மாற்றியது அவர்களின் சுயநல அரசியலை காட்டுவதாக டக்ளஸ் தெரிவித்தார்.