மலைப்புலியின் தாக்குதலுக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளி வைத்தியசாலையில்
#SriLanka
#Hospital
#Attack
#Lanka4
#sri lanka tamil news
#Tiger
Prathees
2 years ago
பொகவந்தலாவ பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மலைப் புலியால் தாக்கப்பட்டார்.
படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே ஜயசூரிய தெரிவித்தார்.
மலைப்புலியை காப்புக்காட்டுக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.