ஜி-7 உச்சிமாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து ஆராய்வு!
ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது இதில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார்.
அவர் ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஜி-7 செயல்பாட்டு அமர்வு நடந்தது. இதில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்று ரஷியாவின் தாக்குதல் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளை எடுத்துக்கூறினார்.
முன்னதாக ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தலைவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மாலையில் சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான விவாதங்கள் நடந்தது. இதிலும் ஜெலன்ஸ்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
3 நாட்கள் நடந்த இந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இதில் உக்ரைன் விவகாரம், பொருளாதார பாதுகாப்பு, பசுமை முதலீடுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி போன்றவை முக்கிய இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.