பாஸ்டர் ஜெரோமை கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழு
#SriLanka
#Police
#Airport
#Lanka4
#sri lanka tamil news
#Pastor
Prathees
2 years ago
இன்று இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்ட பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டுக்கு வரவில்லை. அவரை கைது செய்ய விமான நிலையத்தில் பொலிஸ் குழு ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்த போதிலும் அவர் இதுவரை வரவில்லை என கட்டுநாயக்க செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது அவரது கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்தில் ஞாயிறு ஆராதனை நடைபெறாது என ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
மிரிஹானில் உள்ள ஒரு இடத்தில் இந்தச் சேவை நடைபெறும் என்றும் ஜூம் மூலம் இணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.