யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் தமிழ் விழா- இந்தியாவில் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை
#Lanka4
#SriLanka
#Tamilnews
#Jaffna
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
யாழில் இடம்பெறவுள்ள முப்பெரும் தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர் .
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இதன்போது வருகைதந்தவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினரால் வரவேற்கப்பட்டனர்
இதன்போது வருகைதந்தவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு குறித்த முப்பெருந்தமிழ்விழாவை நடாத்தவுள்ளது.
அந்தவகையில் , இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் பிற்பகல் 2.30மணி யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.