கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் வேண்டுகோள்
#SriLanka
#Mahinda Rajapaksa
#Canada
#world_news
Prabha Praneetha
2 years ago
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும்,அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை யுத்தத்தில் சிக்குண்டதால் இலங்கையில் தமிழ்மக்களும் ஏனைய சமூக குழுக்களும் 25 வருடங்களாக கற்பனை செய்ய முடியாத துயரங்களில் சிக்குண்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்