பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையை கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் கடவுச்சீட்டு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அரபிக்கடலில் அடிக்கடி கடக்கின்றனர். அவர்கள் இரு நாடுகளின் அந்தந்த ஏஜென்சிகளால் பிடிக்கப்படுகிறார்கள்.
கடல் எல்லையைத் தாண்டியதாக மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பிறகு, இந்திய மீனவர் ஒருவர் பாகிஸ்தானில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறினார். எல்லை தாண்டியதற்காக இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 பேர் பிடிபட்டோம். தண்ணீரில் வழிசெலுத்தல் மிதவைகள் அல்லது அடையாளங்கள் எதுவும் இல்லை, மேலும் கடலின் எல்லையை அடையாளம் காண்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. தற்போது எனது நாட்டில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களில் பலர் இன்னும் பாகிஸ்தான் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உதவி கோருவதாகவும் மீனவர் கூறினார். மேலும், தங்களின் படகுகளை மீட்டுத் தர அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.