திக்குகள் எட்டும்: பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும் என்ற நூல் வெளியீடு
#SriLanka
#books
Mayoorikka
2 years ago
2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது.
போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது.
இந்த நூலின் நூலாசிரியர் நிம்மி கௌரிநாதன் என்பவராவார். இவர் ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அமெரிக்காவில் வாழும் எழுத்தாளர்.
இவர் பாலினம் மற்றும் வன்முறை சார்ந்த பேசுபொருளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.