உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு
#SriLanka
#Sri Lanka President
#Lanka4
Prabha Praneetha
2 years ago

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பானது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2 வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதியில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை இது எட்டியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.



