ஓவர் டைம் பிரச்சனை சிக்கிய உணவுப் பதிவேடு : தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் நோயாளர்கள் உட்பட 82 பேருக்கு உணவு இல்லை!

#SriLanka #Hospital #Food #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
ஓவர் டைம் பிரச்சனை சிக்கிய உணவுப் பதிவேடு : தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் நோயாளர்கள் உட்பட 82 பேருக்கு உணவு இல்லை!

சனி மற்றும் ஞாயிறு விஷேட விடுமுறை நாட்களில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பல உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகள் வெட்டப்பட்டமையால், வதிவிட சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் எண்பத்திரண்டு இளநிலை ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக வைத்திய ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்ட உணவு கிடைக்கவில்லை என நோயாளிகள் தெரிவித்தனர்.

உணவு வழங்க, இந்த அதிகாரிகள் உரிய உணவுப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அவர்களின் மேலதிக நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆவணங்களில் கையெழுத்திடவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

சிங்கள புத்தாண்டு தினங்களில் மூன்று வேளை உணவும் கிடைக்கவில்லை எனவும் வெசாக் தினத்தில் கூட உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட, ஆறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, மூன்று வேளை உணவு வழங்க வேண்டும் என, மருத்துவமனை நோயாளிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

 கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பட் இது தொடர்பில் உடனடியாக ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!