தென் மாகாணத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்
#SriLanka
#doctor
#Disease
#Warning
Prasu
2 years ago

தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் கடுமையான தொற்றுநோயாக பரவி வருவதாக காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அசுத்தமான நீர், ஈரமான மண் அல்லது சேறு தொடர்பான எந்தவொரு வேலையையும் மேற்கொள்பவர்கள் எலிக்காய்ச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.



