பாணந்துறை கடற்கரையில் சுற்றித்திரிந்த முதலைக்கு நேர்ந்த கதி

#SriLanka #Police #people #Lanka4
Prathees
3 years ago
பாணந்துறை கடற்கரையில் சுற்றித்திரிந்த முதலைக்கு நேர்ந்த கதி

பாணந்துறை கடற்கரையில் சுற்றித்திரிந்த 7 அடி நீள முதலையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள கடற்கரை அருகே உள்ள கல் சுவர் அருகே நேற்று மதியம் தோண்டுபவர் ஒருவர் முதலையை முதலில் பார்த்துள்ளார்

பின்னர், இது குறித்து பாணந்துறை ஆயுள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்த போது முதலை மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து முதலை குறித்து அத்திடியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

 எவ்வாறாயினும், பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து முதலையை வலை மூலம் பிடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 பிடிபட்ட முதலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4