நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

#India #Tiger #Zoo #National Zoo
Mani
3 years ago
 நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் குடியேறுவதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சிறுத்தைகளை மத்திய அரசு கொண்டு வருகிறது.இவ்வாறு நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தின் குணோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டன.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகள்  கொண்டு வரப்பட்டது. அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குனோ உயிரியல் பூங்காவிற்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து புலிகள் உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில கால்நடை பராமரிப்புத்துறை அனுமதி அளித்ததையடுத்து, கடந்த 3 நாட்களாக சிவிங்கிப்புலிகள்  பூங்காவில் விடப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளில்  ஒன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4