காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பாசன ஆண்டுக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Meeting #India #Tamil Nadu #Kerala
Mani
3 years ago
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பாசன ஆண்டுக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் இன்று காலை டெல்லியில் ஹல்தார் தலைமையில் தொடங்கியது.

காவிரி தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, தலைவர் சுப்ரமணியன் மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் கோடைக்காலத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பருவமழை காலம் நெருங்கி வருவதால், பாசன ஆண்டு தொடங்க உள்ள நிலையில், காவிரி ஆற்றின் மழைப்பொழிவு, நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் இதர அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4