திருகோணமலையை வலுசக்தி கேந்திரநிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவும் சிறிலங்காவும் கலந்துரையாடல்

#Trincomalee #India #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
திருகோணமலையை வலுசக்தி கேந்திரநிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவும் சிறிலங்காவும் கலந்துரையாடல்

திருகோணமலையை வலுசக்தி கேந்திரநிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவும் சிறிலங்காவும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளன.
 
நாட்டுக்கு வருகைத்தந்துள்ள இந்திய கனியவள மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயிங், சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இதன்போது புதுப்பிக்கதக்க சக்தி, உயிர்ம எரிபொருள் மற்றும் பசுமை ஹைட்ரஜன்  போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்புகளை விஸ்தரிப்பதற்கான சாத்தியங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் என்பன குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4