கடன்களை திருப்பி செலுத்தும் கால எல்லையை நீடிக்க சில நாடுகள் விருப்பம்!
#SriLanka
#Ali Sabri
#Finance
#Minister
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்தும் கால எல்லையை நீடிக்க மேலும் நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கையின் சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதகவும் அவர் தெரிவித்துள்ளார்.