மேலதிக பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் நடவடிக்கை
#Bus
#Protest
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
Prathees
2 years ago
பயணிகள் அசௌகரியம் இன்றி பயணிக்க போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தேவைக்கேற்ப தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று தொடரூந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று அதிகூடிய எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ரன் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.