விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்: கல்வி அமைச்சர் கோரிக்கை

#SriLanka #Student #School Student #College Student #Sri Lanka Teachers #Lanka4
Mayoorikka
2 years ago
விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்: கல்வி அமைச்சர் கோரிக்கை

மாணவர்களின்  விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்.  வேலை நிறுத்தம் காரணமாக  கல்விப் பொதுத் தரராதர உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிடுகையில்,

மாணவர்களின்  விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்,''   விடைத்தாள்களை ஆய்வு செய்வது மேலும் இரண்டு வாரங்கள் தாமதமாகும். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் முடிவுகளும் வெளியிடப்படும். இதனால் சாதாரண தரப்பரீட்சை மே மாதம் நடுப் பகுதியில் நடாத்த முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

 ஏற்கனவே  இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் சிறந்த முறையில் நடத்துவோம். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சனைகள் குறையும். 

அரசாங்கத்தில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அவற்றை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். சர்வதேச நாணய நிதிய உதவி 20 ம் திகதி பெறப்படும். அவற்றில் கல்வி அமைச்சிற்கும் சலுகைகள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!