அனுமதி இன்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் கைது

#SriLanka #Arrest #Police #Kilinochchi #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
அனுமதி இன்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு குறித்த மணலினை அனுமதிப்பத்திரம் இன்றி இரவு வேளைகளில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, இரண்டு டிப்பர்கள் மற்றும் உழவுயிந்திரம் ஒன்றும் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தடயப் பொருட்கள் எதிர்வரும் புதன்கிழமை 03.02.2026 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4