எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற 24ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
#Examination
#2023
#Student
#students
#Tamil Student
#Tamil Nadu
Mani
2 years ago
எஸ்.எஸ்.சி தேர்வாணையம் (Staff Selection commission) அறிவித்துள்ள MTS (Multi-Tasking Examination, 2022 ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், தேர்விற்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. இன்று (17ம் தேதி) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.