பணம் அச்சடித்து தேர்தல் நடத்தினால் IMF இன் உதவி கிடைக்காது: பந்துல
#Bandula Gunawardana
#SriLanka
#Election
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென்றாலும் அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை காரணமாக அரசாங்கத்திடம் ஒரு பைசா கூட மீதம் இல்லை என்றும் கடந்த அரசாங்கங்களும் கடன் வாங்கியே செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கடன் வாங்க இயலாது என்றும், சர்வதேச நாணய நிதியம், பணம் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, பணம் அச்சடிக்க வேண்டுமென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரி இதுவரை சந்திக்காத பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.



