ஆர்ப்பாட்டத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக களனி பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர் மற்றும் செயற்பாட்டாளர் கைது
#SriLanka
#Arrest
#Student
Prasu
2 years ago
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் அதே பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் செயற்பாட்டாளரும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கல்வி அமைச்சின் பிரதான வாயில் கதவு சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.