பிணையில் விடுவிக்கப்பட்ட கஞ்சிபானி இம்ரான் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்
#India
#drugs
Prathees
2 years ago

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் இருந்து அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அவர் ராமேஸ்வரம் ஊடாக இந்தியா வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரை கண்காணிக்குமாறு தமிழக காவல் துறை தலைவர்கள் மற்றும் மாநில காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



