வடமராட்சி உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்!
Prabha Praneetha
3 years ago
இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று உடுத்துறையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது…
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
ad
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள், பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் .
a

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.