யாழில் காணொளி அழைப்பு மூலம் உயிரை மாய்த்து கொண்ட காதலன்
Prasu
2 years ago

தனியார் கல்வி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காதிலிக்கு வீடியோ கால் செய்து வாலிபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



