உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

Kanimoli
3 years ago
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியுள்ளது. 

இலங்கையில், கடந்த மாதங்களில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தாலும் தற்போது  மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4