போராட்டங்கள் நடைபெறும் இடங்களை குறிவைத்து உயர் பாதுகாப்பு வலயங்கள் நியமிக்கப்பட்டுள்ளன
Prathees
2 years ago

போராட்டம் இடம்பெற்ற இடங்களை இலக்கு வைத்து உயர் பாதுகாப்பு வலயங்கள் என பெயரிடப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி கடந்த 23ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.



