அதி பாதுகாப்பு வலயம் இலங்கைக்கோ சர்வதேசத்துக்கோ புதிய விடயம் அல்ல: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
Mayoorikka
2 years ago

அண்மையில் ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அதி பாதுகாப்பு வலயம் என்பது, இலங்கைக்கோ சர்வதேசத்துக்கோ புதிய விடயம் அல்ல என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஜனாதிபதி நாடு திரும்பியதும் குறித்த வர்த்தமானி தொடர்பில், ஆராய்ந்து அதிபாதுகாப்பு வலய வர்த்தமானியை தொடர்ந்து கடைப்பிடிப்பதா, அதில் சில பகுதிகளை நீக்குவதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பார் என்றார்.
இன்று (26) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.



