சர்வதேச நாணய நிதியம் இந்த வருட இறுதி வரை ஒரு சதம் கூட வழங்காது - உதயங்க

Prathees
2 years ago
சர்வதேச நாணய நிதியம் இந்த வருட இறுதி வரை ஒரு சதம் கூட வழங்காது - உதயங்க

நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்இ இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டார். 

“சுற்றுலாவில் முக்கிய விஷயம் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவது.

பிறகு மீண்டும் போராட்டங்களைக் கொண்டு வந்து உலகுக்குக் காட்டினால் நாட்டில் அமைதி இல்லை.

நாட்டில் பரபரப்பு அலை வீசுகிறது என்று உலகிற்கு அனுப்பினால் சுற்றுலா பயணிகள் திரும்பி வரமாட்டார்கள்.அப்போது இந்த சுற்றுலா பயணிகள் வரும் நேரம் வரும். 

இந்த வருடத்தில் இந்த மூன்று நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளையும் அன்னியச் செலாவணியையும் நாட்டிற்குக் கொண்டு வராவிட்டால் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்க நேரிடும் என்பதை இந்தப் போராட்ட அலையை நடைமுறைப்படுத்துபவர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 நமக்கு தேவையான விஷயங்களை முன்னோக்கி கொண்டு வாருங்கள். ஏனெனில் இந்த ஆண்டு இறுதி வரை ஐஆகு ஐந்து சதக் காசுகளை வழங்காது என அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!