தம்பி ராஜாவின் மகன் மற்றும் உதவியாளர் கைது
Prathees
2 years ago

இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரரான மன்ன குமாரவின் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்திவரும் தம்பிராஜாவின் மகன் மற்றும் பிரான்ஸில் உள்ள அவரது உதவியாளர் ஒருவரையும் நேற்று விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்களிடம் இருந்து 151 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை நடத்தும் புகுடுகண்ணாவின் நெருங்கிய கூட்டாளியாக தம்பி ராஜா அடையாளம் காணப்பட்டுள்ளார்.



