புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து - 03 பேர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவடன்குளம் பகுதியில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்