தவறான அபிப்பிராயத்தின் காரணமாக வீட்டிற்கு தீ வைத்தனர் - பிரதமர்

Prathees
3 years ago
தவறான அபிப்பிராயத்தின் காரணமாக  வீட்டிற்கு தீ வைத்தனர் - பிரதமர்

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தாம் கூறிய உண்மைகள் மற்றும் முன்மொழிவுகளை தவறாகப் பிரசாரம் செய்ததன் காரணமாகவே செயற்பாட்டாளர்களால் தனது தனிப்பட்ட வீடு எரிந்து சாம்பலாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (10ஆம் திகதி) தெரிவித்தார்.

போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றதாகவும், அதில் பெரும்பான்மையான கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்று பங்கேற்றதாகவும், சபாநாயகர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்வைத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். 

இங்கு அவர் மூன்று மாற்று முன்மொழிவுகளை முன்வைத்ததுடன், ஜனாதிபதியும் பிரதமரும் ராஜினாமா செய்து பாராளுமன்றத்தின் பிரதிநிதி ஒருவரை பதில் ஜனாதிபதியாக நியமித்து புதிய பிரதமரை சர்வகட்சி இணக்கப்பாட்டின் ஊடாக நியமித்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி வழங்குவதே கடைசி தெரிவாகும். 

குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாகவே தனது தனிப்பட்ட வீடு எரிந்து சாம்பலாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க 'திவயின'விடம் தெரிவித்தார்.

 இது தொடர்பில் சபாநாயகரிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக பிரதமர் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய மக்கள் போராட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு முற்றாக எரிக்கப்பட்டதுடன், அவரது ஐயாயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் அந்த வீட்டில் இருந்த தளபாடங்களும் எரிக்கப்பட்டன.

 நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்பவில்லை என பிரதமர் அறிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4