எரிபொருளுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கும் தாயார்

Kanimoli
4 years ago
எரிபொருளுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கும் தாயார்

 இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் மக்கள் நாட்கணக்காக இரவுபகலாக மக்கள் காத்திருக்கும் அவநிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவியரீதியில் மக்கள் இவ்வாறு காத்திருக்கையில் அங்கங்கே சில துயமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில் பொரளை ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய எரிபொருள் வருசையில் தாயொருவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு , தாயொருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்கிறார்.

இன்னும் எத்தனை மணி நேரம் நிற்கவேண்டுமோ தெரியவில்லை.. வாகனங்கள் நகருவதாகவும் இல்லை.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் துயரம் வந்து நிற்கிறது.

இந்நிலையில் பொரளை ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய வாகன வரிசை சுமார் ஒரு கிலோமீற்றர் தாண்டி , விஜேராம மாவத்தை வரை தொடர்கிறதாக முகநூல்வாசி ஒருவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4